`பொய் சொன்னால் ஓங்கி அறைவிழும் – யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி!

உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் “பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆக்சிஜன் கையுமாக அங்கிருக்கும் மக்கள் தவித்து வருவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் நாளிதழ்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி நாட்டையை உலுக்கி வருகிறது. ஆனால், இது எதுவும் நடக்காதது போல அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடந்துகொள்கிறார். இது பலரையும் அதிருப்தியடையச்செய்துள்ளது. மேலும் இது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவருபவர்களை அவர் மிரட்டியும் வருகிறார்.

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லி இருந்தார். அவர் சொன்னதை ஆங்கில செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தது.

அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் சித்தார்த், `` “ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்!” என ட்வீட் செய்துள்ளார். கடந்த 14 நாட்களில் அந்த மாநிலத்தில் 394610 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சித்தார்த்தை பொறுத்தவரை அவர் மற்ற திரைப்பிரலங்களை போல வெறுமனே படத்தில் நடிப்பதை மட்டும் வேளையாக வைத்துக்கொள்ளவில்லை. மாறாக அவர் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading `பொய் சொன்னால் ஓங்கி அறைவிழும் – யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்