தளபதி 62படப்பிடிப்பு:ரசிகரின் செயலால் கடுப்பான ஏ.ஆர்.முருகதாஸ்

 "தளபதி 62" பெயர் வைக்காத திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படம் சென்னையில் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் ஒரு காட்சிக்காக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இரவு நேர ஷூட்டிங் நடைபெற்றது.
படத்தில் ஒரு காட்சிக்காக விஜய் பல நூறு இளைஞர்களுடன் பைக்கில் நகர் வளம் வருவது போன்ற  காட்சி உள்ளதாகவும் அதற்காக விஜய் நிஜத்தில் பல இளைஞர்களுடன் பைக்கில் வளம் வரும் காட்சியை ரசிகர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விட்டார். 
இயக்குனருக்கு விஷயம் தெரிய கடும் கோபத்தில் உள்ளாராம்.இப்படி முக்கியமான காட்சிகளை ரகசியமாக எடுக்கலாம் என்று நினைத்தால் அது இப்படி நொடியில் பரவி விடுவதால் கடுப்பில் உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
"விஜய் 62" ஆஸ்கார் நாயகன் இசையமைத்து வரும்  திரைப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தளபதி 62படப்பிடிப்பு:ரசிகரின் செயலால் கடுப்பான ஏ.ஆர்.முருகதாஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தினகரனுக்கு போட்டியாக ‘அம்மா அணி’ அமைப்பை தொடங்கிய திவாகரன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்