பட வாய்ப்பு இல்லையென்றால் துபாய் சென்றுவிடுவேன்: சொல்கிறார் நிவேதா

மதுரையை பூர்விகமாக கொண்ட நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மதுரையில் பிறந்தாலும் நான் துபாயில் வளர்ந்தேன் என்று கூறுகிறார் நிவேதா. நேரம் கிடைக்கும் போது மதுரை சென்று வருவேன் என்றும் கூறுகிறார்.

முதல் படம் வந்தது தான் தெரியும் அதற்குள் 8 படங்களில் நடித்து விட்டார் நிவேதா. எனக்கு முதலில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. ஒரு அழகி போட்டியில் என்னை பார்த்துவிட்டு நடிப்பதற்கு அழைத்தனர். நானும் சரி ஒரு படத்தில் நடித்துவிடலாம் என்று தான் முதலில் நடிக்கவந்தேன். ஆனால் காலம் என்னை முழு நேர நடிகையாக மாற்றிவிட்டது.

எனக்கு படத்தை இயக்க வேண்டும் என்ற அசையுள்ளது. இயக்குனராக ஆசை. எனக்கு ஓவியம் வரைய பிடிக்கும், நன்றாக வரையவும் செய்வேன். கார் ஓட்ட பிடிக்கும். ஒரு முறை கார் பந்தயத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்.

சினிமாவில் நான் யாரிடமும் வாய்ப்புக்காக சென்று நின்றதில்லை. நான் என் வேலைகளை மட்டுமே பார்த்து வருகிறேன். ஒருவேளை எனக்கு சினிமா வாய்ப்பு இல்லை என்றாலோ அல்லது குறைந்து வருகிறது என்று நான் உணர்ந்தாலோ துபாய்க்கு சென்று விடுவேன் என்று பதிலளித்தார் நிவேதா பெத்துராஜ்.

You'r reading பட வாய்ப்பு இல்லையென்றால் துபாய் சென்றுவிடுவேன்: சொல்கிறார் நிவேதா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒஷாமா பின்லேடனுக்கு ஆதரவு திரட்டிய இளைஞர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்