படையப்பா 2வில் ரஜினிக்காக நீலாம்பரியை சந்தித்தாரா இயக்குனர்?

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்து நாடு முழுவதும் ஒரு பெரிய புயலை உருவாக்கினார் ரஜினி.

அரசியல் அறிவிப்பை அறிவித்த பின்பு தனது முதல் படமான காலா-வை ரிலீஸ் செய்தார். கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நேரத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் துவங்கியது.

ஷங்கரின் 2.0 படமும் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ஒரு படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முத்து, படையப்பா, லிங்கா படங்களை தொடர்ந்து தற்போது ரவிக்குமார் இயக்கவுள்ள திரைப்படத்தின் கதையை கேட்டு சம்மதித்துள்ளார் ரஜினி.

சில வருடங்களுக்கு முன்னர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஜக்குபாய், ராணா திரைப்படங்கள் இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் வந்து அப்படியே மறைந்தது. லிங்கா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கொடுக்கவில்லை.

தற்போது ரஜினி சம்மதித்து இருக்கும் படத்திற்காக படையப்பா படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை சந்தித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். ஆகவே இது படையப்பா படத்தின் 2ம் பாகமாக இருக்கலாம் என தகவல்கள் உலா வருகிறது.

சமீபத்தில் காலா படத்தின் பாடல்கள் வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி தான் நடித்த படங்களில் மிகவும் சவாலாக கருதிய பாத்திரங்கள், ஒன்று பாட்ஷா ஆன்டனி, படையப்பா நீலாம்பரி, தற்போது காலா நானா படேகர், என கூறி இருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading படையப்பா 2வில் ரஜினிக்காக நீலாம்பரியை சந்தித்தாரா இயக்குனர்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ்: கனாவின் சீக்ரெட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்