தமிழக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய சூர்யா

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிவிழாவில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியை சூர்யா வழங்கினார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சாயிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். விவசாயம் மற்றும் கூட்டுக் குடும்பம் மையமாக உருவாக்கப்பட்ட இந்த படம் திரையரங்குகளில் வெற்றிநடைப்போடுகிறது.

இந்நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில், இயக்குனர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

விழாவின் ஒரு பகுதியாக, தமிழக விவசாயிகளின் நலன் கருதி, ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். இதைதவிர, விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டன. நடிகர் சூர்யாவின் இந்த நற்செயல் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

You'r reading தமிழக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய சூர்யா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரயில் விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்