மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கார்த்தி

நடிகர் கார்த்தி இன்று மறைந்த கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் தமிழர்களை உலுக்கியது.

கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட தேசிய தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ராஜாஜி ஹாலுக்கு வர முடியாத பலர், மெரினா அண்ணா சதுக்கத்தில் உள்ள கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில், நேற்று மதியம் நடிகை திரிஷா கருணாநிதியின் சாமதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், இன்று நடிகர் கார்த்தி கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு, மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற கார்த்தி, அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

You'r reading மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கார்த்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்து பெண்கள் மறுமணத்திற்கு முதல்முறையாக பாகிஸ்தான் அரசு அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்