தீவிர ரசிகர் ஒருவருக்கு செல்பியுடன் நன்றி தெரிவித்த பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் படம் காதல் கொண்டேன் 2003ல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் எதோ ஒரு காரணத்தால் தாமதமாகி வருகிறது. தற்போது இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே என்ற திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது.

இப்படி பிஸியாகி உள்ள செல்வராகவன் தனது தீவிரமான ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்துள்ளளார். அவரின் பெயர் ஸ்ரீவட்சன், அந்த சந்திப்பின் போது செல்வராகவனுக்கு ஸ்ரீவட்சன் அன்பு பரிசாக ஒரு டீ.ஷர்ட் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட செல்வராகவன் இன்று அதனை உடுத்திக்கொண்டு ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தங்களது அன்பளிப்புக்கு நன்றி என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

You'r reading தீவிர ரசிகர் ஒருவருக்கு செல்பியுடன் நன்றி தெரிவித்த பிரபல இயக்குனர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒன்றன் பின் ஒன்றாக.. செக்க சிவந்த வானம் போஸ்டர்கள் ரிலீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்