விவசாயிகளின் கடனை தீர்த்த பாலிவுட் நடிகர்

விவசாயிகள் வாங்கிய ரூ.1.50 கோடி கடனை செலுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

கடும் வறட்சி, மழையின்மை, கடன் போன்ற பல்வேறு காரணத்தால் விவசாயிகள் கடும் வேதனையடைந்து தற்கொலை செய்துக் கொள்கின்றனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருதி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாவது: விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இதுபற்றி பல ஆண்டுகளுக்கே முன்பு வருந்தி, சுமார் 40 முதல் 50 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவினேன்.

இதுபோல், சமீபத்தில் சுமார் 200 விவசாயிகளின் பெயர் பட்டியலை வங்கியில் இருந்து பெற்று, அவர்களது சுமார் ரூ1.50 கோடி கடனை திருப்பி செலுத்தினேன்.
மேலும், வீரமரணமடைந்த சுமார் 44 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading விவசாயிகளின் கடனை தீர்த்த பாலிவுட் நடிகர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வில்வித்தை போட்டியில் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்