ரஹ்மான் கோட்டையில் உருவாகும் ரஜினியின் பேட்ட

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் YM ஸ்டுடியோவில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இசைப்புயல் ஏ.அர். ரஹ்மான் சென்னை, செங்குன்றத்தில் உள்ள தனது ஏ.ஆர். கார்டனில், புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய YM ஸ்டுடியோஸ் எனும் படப்பிடிப்பு தளத்தை நிறுவியுள்ளார்.

அதில், பெரிய இரண்டு படப்பிடிப்பு தளங்கள், க்ரீன் மேட் ஸ்டுடியோ என கிட்டத்தட்ட 200 பேர் தங்கி வேலை செய்யுமளவு விசாலமான இடமாக அதனை உருவாக்கியுள்ளார்.

இந்த YM ஸ்டுடியோவில் தான், தற்போது கார்த்திக் சுப்புராஜ், ரஜினியை வைத்து இயக்கி வரும் ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.0 படத்தின் க்ரின் மேட் காட்சிகளும் இதே ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading ரஹ்மான் கோட்டையில் உருவாகும் ரஜினியின் பேட்ட Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தோனேசியா: 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்