ஜார்ஜியாவில் தொடங்கிய சிம்பு படம் !

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு தெலுங்கில் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஆன பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

தெலுங்கில் நடிகை நதியா நடித்த முக்கிய வேடத்தில் தமிழில் குஷ்பு நடிக்கிறார்.

சமந்தா, பிரணிதா என இரண்டு நாயகிகள் பவன் கல்யாண் படத்தில் நடித்திருந்தனர். தமிழில், நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா பட நாயகி மேகா ஆகாஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகி குறித்த தகவல் இல்லை.

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள ’செக்கச்சிவந்த வானம்’ படம் இம்மாதம் 27ம் தேதி ரிலீசாகிறது. ”வந்தா ராஜாவாத்தான் வருவேன்” என்ற சிம்புவின் டயலாக் மூலமே அவருக்கு நல்ல ஸ்கோப் மற்றும் எதிர்காலத்தை இந்த படம் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அடுத்த படமும் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என சிந்தித்தே பிளாக்பஸ்டர் படமான ‘அத்தரண்டிகி தாரேதி’யை கையில் எடுத்துள்ளார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சிம்பு டைம் ஸ்டார்ட்ஸ்!

You'r reading ஜார்ஜியாவில் தொடங்கிய சிம்பு படம் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேல் ரத்னா விருது: கோலி, மீராபாய் பெயர்கள் பரிந்துரை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்