எந்த மாநில பெண் அழகு?... இணைய மோதலுக்கு பலியான பிரியா வாரியர்...

தமிழக- கேரள இளைஞர்களிடையே எந்த மாநில பெண்கள் அழகு என இணையதளத்தில் ஏற்பட்ட மோதலுக்கு, புகழின் உச்சத்துக்கு சென்ற பிரியா வாரியரின் பாடல் பலியாகியுள்ளது.

'ஒரு ஆதர் லவ்' படத்தின் Freak penne பாடல் வெளியானது... மனதை வருடும் இசை, நடிகை பிரியா வாரியரின் புகழ்பாடும் வரிகள், வண்ணங்களை அள்ளித்தெளித்த ஒளிப்பதிவு என பாடல் பிரமாண்டத்தை வெளிப்படுத்தியது.

இந்தப் பாடல் தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த பாடலுக்கு லைக்ஸை விட டிஸ்லைக்ஸ் அதிகமாக உள்ளது... அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல. லைக்ஸை விட டிஸ்லைக்ஸ் ஆறு மடங்கு தெறிக்க விட்டுள்ளனர் தமிழக இளைஞர்கள்.


தமிழக-கேரள இளைஞர்கள் இடையே இணைய தளத்தில் நிலவும் நீண்ட மோதலின் எதிரொலி தான் இந்த வெறுப்புக்கு காரணம். எந்த மாநில பெண்கள் அழகு என இரு மாநில இளைஞர்கள் இடையே வார்த்தைபோர் வலுத்துள்ளது.

இந்த மோதல் காலகட்டத்தில்தான் பிரியா வாரியரின் Freak penne பாடல் வெளியானது. எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யக் காத்திருந்த தமிழக இளைஞர்களின் விரல்களுக்கு பலியானது பிரியா வாரியர் பாடல். கண் இமைத்து புகழின் உச்சத்துக்குப் சென்ற பிரியா வாரியரை, இமைக்கும் நொடியில் தமிழக இளைஞர்கள் கீழே இறக்கிவிட்டனர்.

You'r reading எந்த மாநில பெண் அழகு?... இணைய மோதலுக்கு பலியான பிரியா வாரியர்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியா மீது பொருளாதார தடை ? அமெரிக்கா மிரட்டல்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்