விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் என்னதான் ஆச்சு?

விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் என்னதான் ஆச்சு?

சன் டிவியில் விஷால் ரியாலிட்டி ஷோவை துவங்கிய உடனே, ஜெயா டிவியில் வரலட்சுமியும் ரியாலிட்டி ஷோவை நடத்துகிறார்.

கமல் தொகுத்து வழங்கிய் பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து, வெள்ளித்திரை பிரபலங்களின் பார்வை சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோக்கள் மீது விழுந்துள்ளது.

கலர்ஸ் தமிழில் வெளியான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், ஆர்யா கலந்து கொண்டார். தற்போது, சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு விஷால் தொகுத்து வழங்கும் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. அறிமுக நிகழ்ச்சியில், நட்புக்காக சூர்யா தம்பியும், நடிகருமான கார்த்தி பங்கேற்றார். ஏழை மக்களுக்கு உதவும் நிகழ்ச்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஷாலின் தோழி மற்றும் நாயகியான வரலட்சுமி சரத்குமார், ஜெயா டிவியில், உன்னை அறிந்தால் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குகிறார். தமிழ் சினிமாவில் கைவசம் பல படங்களை வைத்துக் கொண்டு பிசியாக உள்ள வரு, எப்படி சின்னத்திரை ஷோவுக்கு ஒப்புக் கொண்டார் என்பது கோலிவுட்டின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி?

சமீபத்தில், தனது ட்விட்டர் பக்கத்தில் வேற, தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், வரலட்சுமி இருவருக்குள்ளும் தொழில் போட்டியா? அல்லது ஏதாவது பிரச்சனையா என்பது தெரியவில்லை. ஆனால், ஏதோ இருக்கிறது என்பது மட்டும் இவர்களின் அதிரடி எதிர் போட்டி மூலம் புலப்படுகிறது.

You'r reading விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் என்னதான் ஆச்சு? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய்சேதுபதியை ஓவரா சைட் அடிக்காதீங்க!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்