டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் விக்ரம்

Actor Vikram awarded Rs 25 lakh relief fund for Delta districts

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் விக்ரம்.

கஜா புயலால் நாகப்பட்டினம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதன் எதிரொலியால், தென்னை மரங்கள், வாழை, கரும்பு முதல் கால்நடைகள் பலவும் அழிந்தன.

இதனால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.
இதனால், அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் நிவாரண நிதிகள் வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக, விஜய், ரஜினி, சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சங்கர், வைரமுத்து உள்ளிட்ட பலர் நிதி வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விக்ரம் ரூ.25 லட்சம் நிவாரண நதியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.

You'r reading டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் விக்ரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐ.நா. சபையில் நிதி மோசடி... எரிக் சொல்ஹைம் ராஜினாமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்