கஜா புயல் பாதிப்பு: ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் அஜித்

Actor Ajith gives Rs 15 lakh relief fund

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன. கஜா புயலால் ஏற்பட்ட சூறைக்காற்று, கனமழையில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகள், படகுகள் என விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் வேரோடு அழிந்தன. இதனால், விவசாயிகளும், மீனவர்களும் மீளா துயரத்தில் உள்ளனர்.

தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வர்களும், சினிமா பிரபலங்களும் நிவாரண பொருட்கள், நிவாரண நிதிகள் என உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அஜித் கஜா புயல் பாதிப்பிற்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கி உள்ளார்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

You'r reading கஜா புயல் பாதிப்பு: ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் அஜித் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான சுறா புட்டு செய்ய ரெடியா ??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்