ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்கவே ஆசை!

selvaragavan desire to aayirathil oruvan 2

ஆயிரத்தில் ஒருவன் 2ஆம் பாகத்தை எடுக்க விரும்புவதாக செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.

சோழனின் 12ஆம் நூற்றாண்டு வாழ்க்கை பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா,பார்த்திபன் ஆகியோர்  நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார்.

2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாகவும் ஓர் அங்கமாகவும் அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

எப்போதும் செல்வராகவனிடம் ரசிகர்களால் எழும் கேள்வியாக இருப்பது என்னவோ ‘புதுப்பேட்டை 2’, `ஆயிரத்தில் ஒருவன் 2' எப்போது வரும் என்பது தான். அவரும் நிச்சயம் வரும் என்று கூறி ரசிகர்களை ஆசுவாசப்படுத்துவார். இதற்கிடையே, தன்னுடைய ஆசை குறித்து தற்போது டுவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார் செல்வராகவன்.

ஆயிரத்தில் ஒருவன் 2 எடுப்பது தான் என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ``வெளியே எங்குச் சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2‘ எப்போது என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயினும் என் மனதுக்குள் இருக்கும் கனவு `ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்“ எனக் கூறியுள்ளார்.

 

You'r reading ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்கவே ஆசை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விரைவில் முதலிடம் பிடிப்பேன்- குல்தீப் யாதவ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்