தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் ரகசிய நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம்..

ரன்வீர்சிங்குக்கும் தீபிகா படுகோனேவுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில், முன்னணி நாயகியாக விளங்கிவருபவர் தீபிகா படுகோனே. கடந்த 2006ம் ஆண்டில் இருந்து நடித்து வரும் தீபிகா, ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், தீபிகா படுகோனேவுக்கும், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். சர்ச்சையில் உள்ள பத்மாவத் படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இதில், தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மினியாகவும் அவர் மீது காதல் கொண்டு படை எடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபிகா படுகோனே தனது 32வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினார். அப்போது, ரன்வீருக்கும் தீபிகாவுக்கும் நிச்சதார்த்தம் நடந்ததாகவும், ரன்வீர் சிங் தீபிகாவுக்கு விலை உயர்ந்த மோதிரம் அணிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இருவரது திருமணமும் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் ரகசிய நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஸ்போர்ட் எடுக்க இனி ஆதார் செல்லாது - வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்