திருமணமாகாத விரக்தியில் திருவான்மியூர் வாலிபர் தற்கொலை முயற்சி

சென்னை: திருவான்மியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் ஆகாத விரக்தியில் பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். வாலிபர் கார் மீது விழுந்ததால் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் வசந்த் (31). இவருக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வந்தது. ஆனால், வெகு நாட்களாக பெண் பார்த்தும் திருமணம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. இதனால் விரக்கியடைந்த வசந்த், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு ஆர்.கே.நகர் ராயப்பேட்டை சாலை சந்திப்பில் உள்ள பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்தார். அப்போது, கீழே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது வசந்த் விழுந்துள்ளார்.

விழுந்த வேகத்தில் வசந்த் உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு, வசந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான், “தனக்கு நீண்ட நாட்களாக பெண் கிடைக்காததால், திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்ததாக” தெரிவித்தார்.

You'r reading திருமணமாகாத விரக்தியில் திருவான்மியூர் வாலிபர் தற்கொலை முயற்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாவித்திரியாக நடித்தார்.. சாவித்திரியாகவே மாறினார்..கீர்த்தி சுரேஷ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்