நடிகை தமன்னா மீது செருப்பு வீச்சு: ஆசாமி கைது

ஐதராபாத்: நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்த நடிகை தமன்னா மீது செருப்பு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத், ஹிமாயத்நகர் பகுதியில் நேற்று புதிய நகைக்கடை திறக்கப்பட்டது. இதன் தறப்பு விழாவுக்கு நடிகை தமன்னா வந்திருந்தார். இதனால், தமன்னாவை பார்க்க கடையின் அருகே ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
நகைக்கடை திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து தமன்னா வெளியே வந்தபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் அவர் மீது செருப்பை தூக்கி வீசினார்.

இது சற்று குறிதவறி நகைக்கடை பணியாளர் ஒருவர் மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்புக்கு நின்றிருந்த நாராயன்குடா போலீசார் தமன்னா மீது செருப்பு வீசிய நபரை பிடித்து கைது செய்தனர்.

பின்னர், அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், “தனது பெயர் கரிமுல்லா (31) என்றும் தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்காததால் செருப்பால் அடிக்க முயன்றதாகவும்” தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், நகைக்கடை பணியாளர் அளித்த புகாரின்பேரில் கரிமுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You'r reading நடிகை தமன்னா மீது செருப்பு வீச்சு: ஆசாமி கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சோடா பாட்டில் யார் வீசுவார்கள் என்று வீசினால் தெரியும் - சீமான் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்