கோவையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. 9வயது சிறுமியை 3 மாணவர்கள் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்

9 yearl old girl child sexually abused in coimbatore

கோவை போதனூர் அடுத்துள்ள சுந்தரபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 9வயது சிறுமியை 60 வயது முதியவர் மற்றும் 3 பள்ளி மாணவர்கள் சீரழித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவையில் சமீபத்தில் 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் அங்கு அடுத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

சுந்தரபுரம் பகுதியில், பள்ளி விடுப்பின் காரணமாக வீட்டில் 9 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். பெற்றோர்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த 60வயது முதியவர் 3 பள்ளி மாணவர்களின் துணையுடன் அந்த வீட்டிற்குள் திடீரென நுழைந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வீடு திரும்பிய பெற்றோர்களிடம் இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி கூறியதும், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 60 வயது முதியவர் மற்றும் அந்த 3 பள்ளி மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகள் வீட்டிலோ அல்லது வெளியிலோ விளையாட செல்வதைக் கூட பெற்றோர்கள் அனுமதிக்க அஞ்சுகின்ற சூழல் அங்கு உருவாகியுள்ளது.

You'r reading கோவையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. 9வயது சிறுமியை 3 மாணவர்கள் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு -தமிழகத்தில் 35 பேர் மட்டுமே தேர்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்