பாகிஸ்தானில் பயங்கரம்: பூட்டிய வீட்டுக்குள் மனைவியுடன் அமைச்சர் மர்ம மரணம்

இஸ்லாமாபாத்: கராச்சியில் பூட்டிய வீட்டிற்குள் மூத்த அமைச்சர் பிஜாரானி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான், சிந்து மாகாணத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித் தறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மிர்ஹசார் கான் பிஜாரானி. இவர், பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அவரது வீடு கராச்சியில் உள்ளது.
இந்நிலையில், அமைச்சரின் வீட்டு கதவு நேற்ற வெகுநேரமாகியும் பூட்டியே கிடந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அமைச்சர் மற்றும் அவரது மனைவி பரிஹாரசாக் ஆகிய இருவரும் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, இருவரது உடலிலும் துப்பாக்கி குண்டுகள் துளையிட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading பாகிஸ்தானில் பயங்கரம்: பூட்டிய வீட்டுக்குள் மனைவியுடன் அமைச்சர் மர்ம மரணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்