நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லேங்க.. வீடியோவில் கதறும் பினு.. (வீடியோ)

போலீஸ் பிடியில் இருந்து தப்பி, உயிருக்கு பயந்து மீண்டும் போலீசிடமே சரணடைந்த ரவுடி பினு, நான் அள்வோ பெரிய ரவுடிலாம் இல்லங்க.. என்ன மன்னிச்சு விட்டுருங்க.. என்று வாக்குமூலத்தில் கெஞ்சிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் சூளைமேடு பகுதியை சேர்ந்த ரவுடி பினு. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கூட்டாளிகள் 100 பேருடன் பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ரவுடிகளை சுற்றி வளைத்தனர். இதில், 75 ரவுடிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், முக்கிய ரவுடியான பினு ரவுடிகள் சிலருடன் தப்பி ஓடிவிட்டான் என்பது தெரியவந்தது.
ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பினு இன்று அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஸ் ராஜ் முன்பு ஆஜராகி சரண் அடைந்தார். இதையடுத்து, பினு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அப்போது, பினு போலீசில் அளித்த வாக்குமூலம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், பினு நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை என்றும் தன்னை மன்னித்து விட்டுவிடும்படியும் அவர் கெஞ்சியுள்ளார்.

மேலும், “ எனன்கு 50 வயது ஆகிறது. எனக்கு சுகர் உள்ளது. என் 50வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கரூரில் இருந்து என் தம்பி என்னை வற்புறுத்தி அழைத்து வந்தான். நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை. என்னை இந்த ஒரு முறை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்றும் பினு கூறினார்.

பினுவின் வாக்குமூலத்தில் பதிவான வீடியோ.. இதோ..

 

You'r reading நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லேங்க.. வீடியோவில் கதறும் பினு.. (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதாவை மருத்துவமனையில் நான் பார்க்கவில்லை: இளவரசி மகன் விவேக் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்