100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 44 பேர் பரிதாப பலி

லிமா: பெரு நாட்டில் 100 அடி பள்ளத்தில் திடீரென பேருந்து ஒன்று கவிழந்து விழுந்ததால், அதில் பயணித்த 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரு நாட்டில் உள்ள ஒகோனா பகுதியில் பானாமெரிகான என்ற நெடுஞ்சாலையில் சுமார் 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, வளைவில் திரும்பியபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் குப்புர கவிழ்ந்தது. அந்த பள்ளம் சுமார் 100 அடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

You'r reading 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 44 பேர் பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியுமா? - கமல்ஹாசனுக்கு பதிலடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்