சோமாலியாவில் பதற்றம்: இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பரிதாப பலி

சோமாலியா நாட்டில் ஏற்பட்ட இரட்டை கார் வெடி குண்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மொகடிசுவில் பதற்ற நிலை உருவாகி உள்ளது. நேற்று அரசு அலுவலகங்களை குறிவைத்து அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

முதலில், தற்கொலைப்படை தீவிரவாதி காரில் வெடிகுண்டு பெருட்களை நிரப்பியும், இரண்டாவதாக, உள்ளூர் அரசு தலைமை அலுவலகங்களை குறி வைத்து அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading சோமாலியாவில் பதற்றம்: இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டதாக கூறப்படும் முனிசேகர் பணியிட மாற்றம் : டிஜிபி உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்