மதுரையில் பரபரப்பு: என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

மதுரை: ரவுடிகளின் ஆதிக்கத்தை அழிக்க போலீஸ் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் சென்றனர்.

அப்போது ரவுடிகளை சுற்றிவளைத்தபோது, ரவுடிகளுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் என்கவுண்டரில் மந்திரி மற்றும் சகுனி ஆகியோர் குண்டு காயம் பட்டு இறந்ததாகவும், மற்றொருவன் தப்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திடீªர் என்கவுண்டர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பாகவும் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

You'r reading மதுரையில் பரபரப்பு: என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்று முதல் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்