நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் – இளைஞர் தற்கொலை வழக்கில் இருவர் கைது

நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் இளைஞர் தற்கொலை.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பட்டரஹள்ளியில் வசித்தவர் அவினாஷ். 24 வயதேயான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவினாசின் சகோதரி கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில்,”எனது சகோதரர் அவினாஷ் வேண்டும் என்றே தற்கொலை செய்யவில்லை. அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உள்ளார். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அவினாஷின் செல்போனில் கிடைத்த தகவலின்படி, ஹனிடிராப் கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவினாசுக்கு, முகநூலில் நேகா சர்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆபாசமாக பேசி வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ காலும் பேசி இருந்ததாக தெரிகிறது. அப்போது, அவினாஷ் நிர்வாணமாக வீடியோ கால் பேசும் காட்சிகளை, நேகா சர்மா வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் ஹனிடிராப் முறையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 21 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல், மேலும் 30 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதால், அவினாஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தானைத் சேர்ந்த ஜாவித், ரூபல் ஆகிய இரு இளைஞர்களை கே.ஆர்.புரம் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You'r reading நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் – இளைஞர் தற்கொலை வழக்கில் இருவர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - IPL தொடரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்