இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே, தண்ணீர் கேன் போட வந்த இளைஞருடன், இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட தவறான நட்பால் இருகுடும்பத்தினர் சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த அவரைகுளத்தைச் சேர்ந்தவர் சதீஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவரின் மனைவி செல்லக்கனிக்கும், தண்ணீர் கேன் போட வரும் இளைஞர் ஜெகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது வீடு அருகருகே இருந்த போதும், ஓய்வாக இருக்கும் நேரத்தில் இருவரும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிக் கொள்வது வழக்கம்.

வீடியோ மூலம் பேசுவதை ரெகார்டு செய்து வைத்துக் கொண்ட ஜெகன், அதனை அவரின் நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சதீசுக்கு, இவர்களின் கள்ள நட்பு தெரியவந்துள்ளது. இது குறித்து மனைவியிடம் சண்டை போட்ட சதீஷ், கள்ள நட்பு குறித்து மாமனாரிடமும் முறையிட்டுள்ளார். செல்லக்கனி பேசிய வீடியோவை ஜெகன் ரெக்காடு செய்து வைத்து இருப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.

இதனால் கொந்தளித்த செல்லக்கனியின் தந்தை மற்றும் சகோதரனும், ஆயுதங்களுடன் ஜெகன் வீட்டுக்கு சென்றுள்ளனர். இவர்கள் வருவதை கண்டு ஜெகன் தப்பி ஓடிவிட்ட நிலையில், ஜெகனின் மனைவியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு செய்து விட்டு தரும்பி வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, நடு ரோட்டில் அரிவாள், மண்வெட்டி, இரும்பு பைப் மற்றும் தென்னை மட்டையை ஆகியவற்றை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரும் ஆயுதங்களை கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதில், நான்கு பேர் படுகாயங்களுடன் பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருகுடும்பத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்திற்கு நுழைபவர்களுக்கு RTPCR பரிசோதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்