6 வயது சிறுமையை பலாத்காரம் செய்து அடித்து கொலை செய்த கொடூரன் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செம்மினபட்டியை சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
செம்மினபட்டியை சேர்ந்த 6 வயது சிறுமியை அவரது பாட்டி ரேஷன் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீடு திரும்பும்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற குப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் பாட்டி சிறுமியை அனுப்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக சிறுமி வீடு திரும்பாததால், வந்தவழியே உறவினர்களும், ஊர்க்காரர்களும் சிறுமியை தேடியுள்ளனர்.
அப்போது, சுக்காவழி என்ற இடத்தில் ஒரு புதருக்கிடையே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
அவ்வழியே சென்ற ராஜ்குமாரை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

You'r reading 6 வயது சிறுமையை பலாத்காரம் செய்து அடித்து கொலை செய்த கொடூரன் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பத்திரிக்கையாளர்களை உடனே விடுவிக்கும்படி பல்வேறு நாடுகள் மியான்மர் அரசுக்கு வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்