ஆட்டோவில் சென்ற ரவுடி கதற கதற வெட்டிக் கொலை

புதுக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற ரவுடியை மர்ம கும்பல் கதற கதற கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற ரவுடியை மர்ம கும்பல் கதற கதற கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர், புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு ஒரு மணியளவில் பயணியை இறக்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் விஜயகுமாரை வழிமறித்து சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனால், அவர் வலியால் அலறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் எழுந்து வந்து பார்ப்பதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், விஜயகுமாரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயகுமார் மீது புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இதனால், முன் விரோதம் காரணமாக விஜயகுமாரை கொலை செய்தனரா என தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading ஆட்டோவில் சென்ற ரவுடி கதற கதற வெட்டிக் கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 6 வயது சிறுமையை பலாத்காரம் செய்து அடித்து கொலை செய்த கொடூரன் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்