பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை

பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சக நடிகை நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் ஒளிபரப்பாகும் வம்சம் உள்பட பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பிரியங்கா சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், பிரியங்கா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பிரியங்கா தற்கொலை செய்துக் கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரியங்காவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரியங்கா தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி உள்ளாரா என்று போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை.. மருத்துவர் வெங்கட்ராமனின் விளக்கம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்