மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேரை தேடும் பணி தீவிரம்

மேற்கு வங்காளத்தில் உள்ள பைரவ் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான 7 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலம், மர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பைரவ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஹரிஹர்புரா என்ற இடத்தில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் நேற்று இரவு 7 மணியளவில் விரிந்தபன்பூர் நோக்கி இரண்டு படகுகள் சென்றன. கரிப்பூர் என்ற இடத்தில் ஒரு படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படகு கவிழும் நேரத்தில், அதில் இருந்த பலர் நீந்தி கரையை வந்து சேர்ந்தனர். ஆனால், இதில் 7 பேர் காணவில்லை. இரவு நேரம் எண்பதால் மீட்புப் படையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அம்மாநில அரசு செய்துத்தந்துள்ளது. இதனால், 7 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

You'r reading மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேரை தேடும் பணி தீவிரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவின் தலைமை நீதிபதியாகிறார் கோகாய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்