சென்னை காட்டுப்பாக்கத்தில் இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

சென்னை போரூரை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் விஜயலஷ்மி நகரில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் வீடு புகுந்து இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அரிவாளால் வெட்டியவர்கள் அங்கிருந்து பத்து சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

ஆனால், இது முன்விரோதம் காரணமாக நடந்த நிகழ்வு என்று அப்பகுதி மக்கள் தி சப்எடிட்டர் நிருபரிடம் கூறியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நகைக்காக நடந்ததா இல்லை முன்விரோதம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

You'r reading சென்னை காட்டுப்பாக்கத்தில் இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறந்த நட்பிற்கு தேவையானவை எது....?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்