சென்னை மந்தைவெளியில் இளைஞர் வெட்டிக்கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை

Youth murder in Chennai Mandhaiveli

சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞர் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென இளைஞரனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து அருகில் இருந்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், 8 பேர் கொண்ட கும்பல் இளைஞரை வெட்டியது தெரியவந்தது. மேலும், இளைஞர் இறந்ததையும் போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து, மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், இளைஞர் பெயர் சிவா என்றும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவயந்துள்ளது.

மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான 8 பேரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading சென்னை மந்தைவெளியில் இளைஞர் வெட்டிக்கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆரோக்கியமான கேரட் பர்ஃபி செய்வது எப்படி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்