செல்பி மோகம்: பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் சீரியஸ்

Youth fallen in valley who tried to take selfie in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் கின்ஹகட் கோட்டை அருகே செல்பி எடுக்க முயன்றபோது தவறி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற சின்ஹகட் கோட்டை உள்ளது. இங்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து இயற்கையையும், பிரம்மாண்ட கோட்டையையும் ரசித்துவிட்டு செல்கின்றனர்.

இயற்கை அழகுடன், தாமும் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் சுற்றுலாப்பயணிகள் உயிரைவிட்ட துயரங்களும் சுன்ஹகட் கோட்டை பகுதியில் உள்ளது.

அந்த வகையில், சின்ஹகட் கோட்டைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கோட்டையின் விளம்பில் சென்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்த நபர் பள்ளத்தக்கில் விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்டையினருடன் விரைந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நபரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அபாய கட்டத்தில் இருக்கும் அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You'r reading செல்பி மோகம்: பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் சீரியஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப தடை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்