மும்பையில் மீண்டும் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

மும்பை: மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாயினர்.

மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை கமலா மில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தின் பதற்றம் மறைவதற்குள் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், கட்டிடத்திற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 7 பேரை மீட்ட வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

You'r reading மும்பையில் மீண்டும் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உடனடியாக பணிக்கு திரும்பாதவர்களை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்