ஜிம்பாப்வேவில் பயங்கர விபத்து: பேருந்து மோதி 47 பேர் பலி

47 killed in bus accident in Zimbabwe

ஜிம்பாப்வே நாட்டில் எதிரெதிரே வந்த பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையில் எதிரெதிரே வந்துக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் பயங்கர வேகத்துடன் மோதின.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைபோலீசார், மீட்புக்குழுவினருடன் விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திலேயே 47 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading ஜிம்பாப்வேவில் பயங்கர விபத்து: பேருந்து மோதி 47 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடங்கியது கந்த சஷ்டி பெருவிழா... அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்