கோவை பரந்தாமன் கொலை வழக்கில் 3 பேர் கைது

kovai paranthaman murder case

கோவை தொழிலதிபர் பரந்தாமன் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கோவை பீளமேடு அருகே உள்ள மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 36). இவர் செட்டிபாளையம் ஈச்சனாரி சாலையில் பழைய டூ வீலர் மற்றும் 4 வீலர்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். கடந்த வியாழக்கிழமை காலையில் பரந்தாமன் கடையில் இருந்த போது மூகமூடி அணிந்து வந்த 5 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அந்த கும்பலை தடுக்க வந்த 2 ஊழியர்களையும் அந்த கும்பல் வெட்டியது.

பின் பரந்தாமன் அணிந்து இருந்த 13 பவுன் சங்கிலி மற்றும் கடையின் முன் நிறுத்தியிருந்த கார் ஆகியவற்றை அந்த கும்பல் திருடி சென்றது. போத்தானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் கொலை சம்பவம் நடந்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் பரந்தாமன் கொலை தொடர்பாக பீளமேட்டை சோ்ந்த ரவி, கோவையை சோந்த மருது மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பரந்தாமனால் ஏமாற்றப்பட்ட நபர் ஒருவர் கூலிப்படை மூலமாக கொலை செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நளினிக்கு பரோல் கிடைக்குமா? உயர்நீதிமன்றம் புது உத்தரவு

You'r reading கோவை பரந்தாமன் கொலை வழக்கில் 3 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீவிரவாத தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம்! –இலங்கையை எச்சரிக்கும் அமெரிக்கா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்