சிதம்பரத்தில் வட இந்தியர் அடித்து படுகொலை

North Indian Beaten to death in TN

சிதம்பரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வட இந்திய இளைஞர் ஒருவர் வணிகர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் காசு கடை தெருவில் நீண்ட நேரமாக வட இந்திய இளைஞர் ஒருவர் சுற்றி வந்தார். அவரை அங்கிருந்த வணிகர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

பின்னர் திருட வந்தவர் என கருதி அப்பகுதி வணிகர்கள் தாக்கி உள்ளனர். இத்தாக்குதலில் அந்த இளைஞர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இளைஞரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக வணிகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading சிதம்பரத்தில் வட இந்தியர் அடித்து படுகொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாரி 2 படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைச்சாச்சு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்