திருப்பூரில் பயங்கரம்: பெண்களை வசியம் செய்ததாக ஜோதிடர் வெட்டிக் கொலை

Astrologer murder in Tiruppur

திருப்பூரில் பெண்களை வசியம் செய்ததாக கூறி பட்டப்பகலில் ஜோதிடர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் குமரன் ரோடு பென்னி காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஜோதிடரான இவர் அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றின் வாசலில் ஜோதிடம் பார்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் அந்த வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஜோதிடர் ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். அதில் அலறித்துடித்த ஜோதிடர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், ஜோதிடரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டபோது ஒரு துண்டு சீட்டு இருந்ததாகவும், அதில், பெண்களை வசியம் செய்ததால் ஜோதிடரை கொலை செய்துள்ளோம் என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளியையும், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading திருப்பூரில் பயங்கரம்: பெண்களை வசியம் செய்ததாக ஜோதிடர் வெட்டிக் கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கஜா புயல் பாதிப்புக்கு உடனடியாக உரிய நிவாரணம் - விவசாயக் கடன், கல்விக்கடன் ரத்து செய்க! திமுக தீர்மானம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்