கட்டிட துறையில் பொறியியல் முடித்தவர்களுக்கு அரசு வேலை!

திண்டுக்கல் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 26

வயது: 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்: ரூ.35,400 – ரூ.1,12,400

தகுதி: DIPLOMA IN CIVIL ENGINEERING

சிவில் துறையில் பொறியியல் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)க்கு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது
மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), 154, மாவட்ட ஆட்சியரகம்-624005, திண்டுக்கல் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 07/01/2021 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கு பற்றி தெரிந்து கொள்ள http://www.nic.gov.in/ in அல்லது http://www.dindigul.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120832-(1).pdf

You'r reading கட்டிட துறையில் பொறியியல் முடித்தவர்களுக்கு அரசு வேலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜல்லிக்கட்டு நடத்த எதற்கு மல்லுகட்டு?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்