இளநீர் பற்றி நீங்கள் அறியாத சில அற்புத நன்மைகள் இதோ...

சத்தான உணவை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும்.நம்மை சுற்றி பல பழங்கள், காய்கறிகள் என சத்துக்கள் கொட்டி கிடைக்கிறது. ஆனால் அதனின் மகத்துவத்தை அறியாமல் நாம் அதை சீண்டவே மாட்டிக்கிறோம். இதனால் அழிவு நமக்கு தான்.. தினமும் ஒரு பழம் அல்லது சுத்தமான பழ ஜூஸ் என்று சாத்தான பொருளை சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் எந்த நோயும் நம்மை நெருங்காது. சரி வாங்க இளநீரில் ஒளிந்து இருக்கும் ரகசியத்தை பார்ப்போம்..

இளநீரை குடிப்பதால் நமது உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை உண்டாகிறது.இதனை தினமும் காலையில் எடுத்து கொள்வதன் மூலம் நமக்கு பல வித ஆரோக்கிய குணங்கள் நம்மை தேடி வரும்.. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், மற்றும் கண் நோய் ஆகியவையில் இருந்து நம்மை பாதுகாக்க இளநீர் உதவுகிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் வயிற்று வலியை காணாமல் போக வைக்கும் சக்தி இளநீருக்கு உள்ளது.இது குடிப்பதன் மூலம் மூளை மிகவும் புத்துணர்ச்சி அடைகிறது. இளநீரில் அதிகமாக நிறைந்து காணப்படும் மற்றொரு ஊட்டச்சத்து நார்ச்சத்து ஆகும். நார்ச்சத்தானது உடலில் செரிமானத்திற்கு வெகுவாக உதவி செய்யும் பண்பை கொண்டது. செரிமானத்திற்கு உதவும் குடல் ஹார்மோன்களுக்கு இது நன்மை செய்கிறது. இதனால் அஜூரணம் மற்றும் செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

வெயில்களில் செல்லும் போது இது அற்புத குடிநீராக மாறி தாகத்தை தணிக்கிறது. இளநீரில் இயற்கையாகவே செரிமான சக்தி கொண்டு காணப்படுகிறது. இது குடலின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. இது குடிப்பதன் மூலம் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய்க்கு நல்ல தீர்வாக இந்த இளநீர் உதவியாக இருக்கிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் வேற எந்த பொருள்களிலும் கிடைக்காது. ஆதலால் தினமும் காலையில் இளநீர் குடித்து புத்துணர்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்..

You'r reading இளநீர் பற்றி நீங்கள் அறியாத சில அற்புத நன்மைகள் இதோ... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஜல் அகர்வால் திருமணம் முடிந்தது.. உறவினர்கள், தோழிகள் வாழ்த்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்