தீராத முடக்குவாதத்தை போக்கக்கூடிய முள் கொண்ட முட்சங்கன்.

முடக்குவாதத்தை போக்கும் முட்சங்கன்

முட்சங்கன் செடி,சங்கஞ்செடி எனவும் அழைக்கப்படுகிறது. இச்செடியை பார்த்திருப்பீர்கள் ஆனால் பெயர் தெரியாமல் போயிருக்கலாம்.இப்போது தெரிந்து கொள்ளுங்கள் இச்செடி எதுவென்று.

முட்சங்கனின் இலைகள், உடல் பலத்தை அதிகரிப்பதற்கும்,வேர் கோழையகற்றவும் இருமலை தணிக்கவும் அதுமட்டுமின்றி கண் பார்வையை அதிகரித்து இரத்தத்தை விருத்தியாக்குகிறது.

முட்சங்கன் இருமலைப் போக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது, சிறு நீர் பெருக்குவதோடு மட்டுமல்லாது எரிச்சலைத் தணிக்கிறது.காய்ச்சலைக் குறைக்கும். முழுத் தாவரமும் கசப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இது புதர் செடி வகையைச் சார்ந்தது.

காயம் சொரி சிரங்கு குணமாக நாம் இதன் இலையை அரைத்து பூச வேண்டும்.
காணாக்கடி, மற்றும் பூச்சிக் கடிகளின் விஷம் குணமாக முட்சங்கன் வேர் 2 கிராம் அளவு நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, 4 மிளகுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பாலில் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் 3 நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.

உடலில் உள்ள சளி வெளியாக முட்சங்கன் இலை, தூதுவேளை இலை, இரண்டையும் ஒரு பிடி அளவு அரைத்து நெல்லிக்காய் அளவு 1 டம்ளர் பசும் பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும்.

அம்மை கொப்புளங்கள் மறைய இலையை அரைத்து அம்மைப் புண்களின் மேல் பூச வேண்டும்.

அடிபட்ட வீக்கம் சரியாக வேர்ப்பட்டையை அரைத்து வீக்கத்தின் மீது பூசிவர வேண்டும்.

இதுபோன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கி வைத்துள்ள இச்செடியை இனி உங்கள் வீட்டில் வளர்க்க பழகி கொள்ளுங்கள்.

You'r reading தீராத முடக்குவாதத்தை போக்கக்கூடிய முள் கொண்ட முட்சங்கன். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி...?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்