பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து- 6 பேர் பலி, பலர் காயம்!

6 dead as seemansal express derails in Bihar:

மீகாரில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பீகார் மாநிலம் ஜோக்பானியில் இருந்து டெல்லி சென்ற சீமான்சல் எக்ஸ்பிரஸ் சஹாத் என்ற இடத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் தூக்கத்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறினர்.

உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்தனர்.இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து- 6 பேர் பலி, பலர் காயம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - இந்தியா பேட்டிங்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்