தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் ரேசில் உள்ளதாக தெரிகிறது.
தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், பாஜக நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் செயலியுந்து, அவரது உடல் நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் விதிகளை மீறுவோர் பல மடங்கு அபராதம் செலுத்த நேரிடுவதுடன், சிறை செல்ல நேரிடும் என்பதால் வாகன ஓட்டிகள் உஷாராக இருப்பதே நல்லது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார்.
ரயில் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. ஏ.சி வகுப்புக்கு ரூ 30, ஏ.சி. அல்லாத வகுப்புக்கு ரூ 15 சேவைக் கட்டணமும் அதற்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக் கட்டணம் வசூல் நாளை முதலே அமலுக்கு வருகிறது.
கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆந்திராவில் கிராமங்கள் தோறும் கட்டப்பட்டு வரும் அரசு கட்டடங்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொடியைப் போன்று பெயிண்ட் அடிக்க ஜெகன் மோகன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாகிஸ்தானில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம் பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.