பவானா தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

புதுடெல்லி: பவானா தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்.

டெல்லியில் அமைந்துள்ள பவானா தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் கிடங்கு ஒன்றில் கடந்த 21ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இன்று சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.

You'r reading பவானா தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஆங் சான் சூகி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்