ப்ரீ வெட்டிங் பரிதாபங்கள் போட்டோஷூட்டின் போது ஆற்றில் விழுந்த திருமண ஜோடி!

Kerala Couple Falls off Canoe Into River While Trying to Kiss During Pre-Wedding Shoot

முன்பெல்லாம் திருமணத்தின் போது தான் பெண்ணின் முகத்தையே பார்க்க முடியும் என்பார்கள். ஆனால், இப்போது என்கேஜ்மென்ட், ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் என திருமணத்திற்கு பின் செய்ய வேண்டிய விஷயங்களில் முக்கால்வாசி விஷயங்கள் முடிந்து விடுகின்றன.

திருமண போட்டோஷூட் நடத்துபவர்கள், அவர்கள் சம்பாதிக்க ப்ரீ வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், ப்ரீ ப்ரெக்னன்ஸி போட்டோஷூட் என அக்‌ஷ்ய திரிதியைப் போல பல அல்டாப்பு விஷயங்களை சந்தையில் இறக்கியுள்ளனர்.

திருமணமாகவுள்ள ஜோடிகளும், இதெல்லாம் திருமணத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கத் துவங்கி விட்டனர்.

கேரளாவை சேர்ந்த விரைவில் திருமணமாகவுள்ள திஜின் - ஷில்பா ஜோடி ப்ரீ வெட்டிங் ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் உள்ள ஆற்றுக்குள் படகில் அந்த திருமண ஜோடியை உட்கார வைத்து வித விதமாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அப்போது மணமக்கள் முத்தம் கொடுப்பது போன்ற போஸ் கொடுக்க முயற்சிக்கும் போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து அந்த ஜோடி தண்ணீருக்குள் விழுந்தனர். ஆனால், ஆழம் ஏதும் இல்லாததால், எந்த காயமும் படாமல் அவர்கள் வெளியே வந்தனர். 

ஆனால், இந்த ப்ரீவெட்டிங் ஷூட்டிங்கை நடத்திய புகைப்பட கலைஞர் பின்சி நிர்மலன் அளித்த பேட்டியில், தங்களது வெப்சைட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் முன்கூட்டியே படகை கவிழ்க்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அதை மணமக்களுக்கு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. திஜின் - ஷில்பா திருமணம் வரும் மே 6ம் தேதி நடைபெறுகிறது.

You'r reading ப்ரீ வெட்டிங் பரிதாபங்கள் போட்டோஷூட்டின் போது ஆற்றில் விழுந்த திருமண ஜோடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டசபைத் தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்! ரஜினி அறிவிப்பு!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்