மறுநாளே தூக்கில் போடுங்கள் நடிகை நமீதா ஆவேசம்.. குற்றம் செய்யப் பயம் வரனும்..

நிர்பயா வழக்கில் 4 குற்ற வாளிக்கு கோர்ட் உத்தரவுப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நடிகை நமீதா வரவேற்பும், ஆவேசமும் வெளியிட்டிருக்கிறார்.

அவர் கூறும்போது,'நிர்பயா பாலியல் கொலைக்குள்ளான வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது, மகிழ்ச்சியானது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையை உடனடியாக தர வேண்டும். அது மீண்டும் இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது என்பதற்கான பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப சட்டத்தைக் கடுமையாக்கி பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களை மறுநாளே தூக்கில் தொங்க விடவேண்டும்' என்றார் நமீதா.

You'r reading மறுநாளே தூக்கில் போடுங்கள் நடிகை நமீதா ஆவேசம்.. குற்றம் செய்யப் பயம் வரனும்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா வேலையிழப்பு.. தொழிலாளர்களுக்குத் தனது ஊதியத்தை வழங்கும் நீதிபதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்