யார் இந்த சுஷ்மிதா சின்ஹா...எதற்காக இவரை கைது செய்ய சொல்லி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்கிறார்கள்...என்னதான் நடந்தது..!

Who is Sushmita Sinha , Why She is Trending in Twitter

யார் இந்த சுஷ்மிதா சின்ஹா...எதற்காக இவரை கைது செய்ய சொல்லி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்கிறார்கள்...என்னதான் நடந்தது..!


சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு தரப்புக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், பின் அதை ஒரு சாரார் எதிர்ப்பதும் , கைது செய்ய சொல்லி அவர்களுக்கு எதிராக ட்ரெண்ட் செய்வதும் நடந்துகொண்டு வருகிறது. கருப்பர் கூட்டம் என்றோரு யூடூப் சேனல் முருகரை பற்றி தவறான கருத்துகள் தெரிவித்ததாக தமிழ்நாட்டில் வந்த செய்தி அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக ஒரு கருத்தை கூறி இருப்பதாக வட நாட்டில் பலராலும் எதிர்க்கப்படுபவர்தான் சுஷ்மிதா சின்ஹா.

சுஷ்மிதா சின்ஹா ஒரு சமூக வலைதள பிரபலர் மற்றும் யூடுப் சேனல் நடத்துபவர். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக வீடியோ வெளியிடுவர்.

அப்படி சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு வீடியோதான் இப்போது வைரல் ஆகிறது. இந்த வீடியோவில் தீஜ் என்று வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வைப் பற்றி பேசியுள்ளார். கணவரின் நீண்ட ஆயுளுக்காக மனைவி விரதம் இருக்கும் இந்த தீஜ் கொண்டாட்டம் மிகவும் தவறானது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறு விரதம் இருக்காதவர்கள் துரதிஷ்டவாதிகள் என்றும் அவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்றும் தீஜ் புத்தத்தில் இருக்கும் சில வரிகளை குறிப்பிட்டுருந்தார். நான் வாங்கிய இந்த தீஜ் புத்தகம் ஒன்றுக்கும் உதவாதது என்றும் கழிப்பறையில் ட்ஷூ வாகத்தான் உபயோகப்படும் என்றும் அந்த வீடியோவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.



இவரின் இந்த வீடியோவை எதிர்த்து பல இந்து அமைப்பை சார்ந்தவர்களும் இவரை கைது செய்ய சொல்லி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

You'r reading யார் இந்த சுஷ்மிதா சின்ஹா...எதற்காக இவரை கைது செய்ய சொல்லி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்கிறார்கள்...என்னதான் நடந்தது..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெறுப்புக்கும், மதவெறிக்கும் இடமில்லை.. சர்ச்சைக்கு பேஸ்புக் விளக்கம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்