பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதை கும்பலுடன் மலையாள நடிகர்களுக்கும் தொடர்பா?

Bengaluru drug racket anoop links with malayalam actors

மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் ஒரு ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கோகைன், எல்எஸ்டி உட்படப் போதைப் பொருளுடன் கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகம்மது அனூப், ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் கன்னடம் மற்றும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மலையாளத்தில் சில முன்னணி நடிகர்களுடன் அனூப்புக்கு நேரடி தொடர்பு இருந்து வந்துள்ளது.

பல விருந்து நிகழ்ச்சிகளில் அவர்களுடன் அனூப் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் மலையாள நடிகர்களிடம் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில மலையாள நடிகர்கள் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அனூப்புக்கு திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸ் என்பவருடனும், கேரள மாநில சிபிஎம் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகனுடனும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

You'r reading பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதை கும்பலுடன் மலையாள நடிகர்களுக்கும் தொடர்பா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 16000 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு - பிரதமரின் சம்பதா யோஜானா திட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்