செல்ஃபியின் மோகம் எத்தனை பேரை காவுவாங்குமோ??கடலுக்கு இரையான கோவா மருத்துவர்

selfi tends to make many accidents

கோவா கடற்கரையில் செல்ஃபி எடுப்பதற்காக சென்ற மருத்துவர் திடிரென்று கடலில் ஏற்பட்ட பெரிய அலையால் இழுக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



ஆந்திரவை சேர்ந்த ரம்யா கிருஷ்ணன் கோவா அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவருகிறார்.நேற்று முன்தினம் கோவா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்ருயுள்ளார்.இந்நிலையில் கடலின் அலையில் செல்ஃபி எடுப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார்.எதிர்பாராதவிதமாக கடலில் ராட்சத அலை எழும்பி ரம்யா கிருஷ்ணனை கடலுக்குள் இழுத்துச்சென்றதால் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். .நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீனவர்கள் அவரின் உடலை கரைக்கு கொண்டுவந்தனர்.அவரின் உடல் இறுதிச்சடங்குக்காக அவரின் சொந்த ஊரான ஆந்திராவிற்கு கொண்டுவரப்பட்டது.

You'r reading செல்ஃபியின் மோகம் எத்தனை பேரை காவுவாங்குமோ??கடலுக்கு இரையான கோவா மருத்துவர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தொற்று இல்லை விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்.. பிரேமலதா அட்மிட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்