ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு தோழி தயார்..

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு எனது தோழி என்ற திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயிலில் செல்லும் பெண் பயணிகளுக்கு ரயில்வே இலாகா மூலமாக உதவி செய்ய எனது தோழி என்ற புதிய திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது இதன்படி ரயிலில் பயணிக்கும் பெண்கள் புறப்படும் ரயில் நிலையத்தில் இருந்து சென்றடையும் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு வழங்கப்படும்.தென் கிழக்கு ரயில்வேயில் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ரயிலில் பயணிக்கும் பெண்கள் பயணத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 182 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. பாதுகாப்பு, மருத்துவம்,உணவு வசதி உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கும் பெண்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு புகார் அளிப்பவர்களுக்குத் தேவையான உதவியை உடனடியாக செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

You'r reading ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு தோழி தயார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆழம் பார்க்கிறாரா ரஜினி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்